மாநகராட்சி குப்பை லாரி மோதி முதியவர் பலி.. தப்பியோடிய லாரி ஓட்டுநருக்கு போலீசார் வலைவீச்சு..!

0 2908

சென்னை வியாசர்பாடி அருகே மாநகராட்சி குப்பை லாரி மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த அய்யாதுரை, தனது மிதிவண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்தார். மெக்சின்புரத்தில் இருந்து குப்பைகளை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த குப்பை லாரி முதியவர் மீது பலமாக மோதியதில், தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து கண்ணாடியை அடித்து உடைத்தெறிந்தனர்.

தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments