தாயை காணாமல் தேடிய குதிரைக்குட்டி.. பேருந்தில் இருந்த குதிரை வரை படத்தை பார்த்து துரத்திய சோகம்..!

0 3392

கோவையில் பேருந்தின் பக்கவாட்டு பகுதியில் ஒட்டப்பட்ட குதிரை ஸ்டிக்கர் படத்தை பார்த்து, பேருந்தின் பின்னாடி நீண்ட தூரம் குதிரை ஓடி வந்த வீடியோ வெளியாகியுள்ளது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே தர்ப்பணம் மண்டபம் மற்றும் படித்துறை பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றி திரிகின்றன.

அதில் ஒரு குதிரை தனது குட்டியை பிரிந்து வேறு பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. தாய் குதிரையை காணாது தேடி வந்த குதிரை குட்டி, பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த படத்தை பார்த்து, தாய் குதிரை நினைவில் தொடர்ந்து ஓடி வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments