கேரள அரசு பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம்

0 2351

இடுக்கி அருகே கேரள அரசு பேருந்து டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.

மூணாறில் இருந்து 60 பயணிகளுடன் அந்த பேருந்து, எர்ணாகுளத்துக்கு சென்றது. சாக்கோச்சன் வாலி எனும் இடத்தில் உள்ள வளைவில் வேகமாக திரும்பியபோது மிகப்பெரிய கல்லில் மோதியுள்ளது. இதில் நேரிட்ட அழுத்தத்தில் முன்பக்க டயர் ஒன்று வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments