கிணற்றுக்குள் இறங்கி மீட்டவரை இறுக்கிக் கொன்ற மலைப்பாம்பு..!

0 4617

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை பிடித்து மீட்டு வந்தவரின் உடலில் சுற்றிய மலைம்பாம்பு அவரை இறுக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள கல்லு குட்டப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி.இவர் தன்னுடைய 50 அடி கிணற்றில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மலைப்பாம்பு ஒன்று விழுந்ததை பார்த்துள்ளார். சம்பவத்தன்று மலைப்பாம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுப்பதற்காக பனகமுட்லுவை சேர்ந்த நடராஜ் என்பவர் கிணற்றில் இறங்கியுள்ளார். மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு கிணற்றில் பாதி வரை தூக்கி வந்துள்ளார்.

அப்போது மலைப்பாம்பு திடீரென நடராஜை சுற்றிக்கொண்டதால் அவரால் மேற்கொண்டு மேலே ஏற முடியாமல் மலைப்பாம்புடன் கிணற்றில் விழுந்தார் மலைப்பாம்பிடம் இருந்து விடுபட முடியாமல் நடராஜ் கூச்சலிட்டதையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் கிணற்றின் அருகே வந்துள்ளனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் மலைப்பாம்பு நடராஜனை இறுக்கி கொன்றுவிட்டது.

கிருஷ்ணகிரியில் இருந்து வந்த தீயணைப்பு துறை அலுவலர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு நடராஜை சடலமாக மீட்டனர் . இதையடுத்து காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நடராஜன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கிணற்று நீருக்குள் பதுங்கி இருக்கும் மலைப்பாம்பை பிடிக்க தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments