அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

0 4221

அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்த உயர்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது...

அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பாக, ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கட்சி அலுவலகம் அமைந்த பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தனர்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ஓ.பி.எஸ்.-ஆல் எப்படி அலுவலக சாவிக்கு உரிமை கோர முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. அரசியல் கட்சியை செயல்படவிடாமல் தடுப்பதை, ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது எனக்கூறி ஓ.பி.எஸ். மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments