சுங்க இலாகா அதிகாரி என கதை அளந்து இளம்பெண்ணை 2ஆவது திருமணம் செய்ய முயன்ற சாப்ட்வேர் என்ஜினீயர் கைது

0 2353

கோவை அருகே சுங்க இலாகா அதிகாரி என்று கூறி, இளம்பெண்ணை 2வது திருமணம் செய்ய முயன்றதாக சாப்ட்வேர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டியை சேர்ந்த ராமுவுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. திருமண தகவல் மையம் மூலம் கணவரை பிரிந்த 26 வயதான பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி, மனைவி பிரிந்து சென்று விட்டதால் அப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சரி என கூறவே, அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கி உடை வாங்கியுள்ளார். பிறகு, பிரிந்து சென்ற மனைவி 20 ஆயிரம் கேட்பதாக கூறி, அத்தொகையை கேட்கவே, சந்தேகமடைந்து உறவினர் மூலம் இளம்பெண் விசாரித்ததில், ராமு ஏமாற்றுவதை கண்டுபிடித்தார். புகாரின்பேரில் ராமுவை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments