இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு படகில் தப்பிச் செல்ல முயற்சி.. 85 பேரை கைது செய்து விசாரணை!

0 2192

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு படகில் சட்டவிரோதமாக புலம்பெயர முயன்ற 85 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது.

ரணவிக்ரமா கப்பலில் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டிகலோவா பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்த மீன்பிடி படகையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்ற திரிகோணமலை, கிளிநொச்சி, பட்டிகலோவா, ஜாப்னா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 பெண்கள், 11 குழந்தைகள் உள்ளிட்ட 85 பேரையும் கைது செய்து திரிகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments