ஆற்றில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!

0 4772

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.

வள்ளிகொல்லைக்காட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வைரமுத்து மற்றும்  12ஆம் வகுப்பு படிக்கும் வைரக்குமார் ஆகியோர் நண்பர்களுடன் நேற்று மதியம்  கருங்குளம் நசுவினி ஆற்றில் குளிக்க சென்றனர்.

அப்பொழுது ஆற்றில் குளித்த அவர்கள் எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கியதால் பரிதாபமாக நீரில் மூழ்கி  உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments