மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து

0 2478
மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திகுத்து

கும்பகோணத்தில் மது அருந்திய நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் மற்றொருவரைக் கத்தியால் குத்திவிட்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கும்பகோணம் பழைய டைமண்ட் டாக்கிஸிலுள்ள மதுபான கடையில், காய்கறி வியாபாரியான குமரேசன், தன் நண்பர் பாபுவுடன் மது அருந்திவிட்டு சாலையில் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், பாபுவை குத்த முயன்றார். பாபு, குமரேசன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கி வலது கையில் குத்தி, கீழே தள்ளிவிட்டு, கத்தியுடன் தப்பி சென்றார்.இதில் குமரேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சாலையில் ரத்தம் கொட்டியது.

உடனே, அங்கிருந்தவர்கள் பாபுவை மீட்டு, கும்பகோணம், அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்த கும்பகோணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாபுவைத் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments