10ம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் கைது..!

0 3039
10ம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் கைது..!

அரியலூரில் 10ம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சுந்தரேசபுரம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரின் உறவினரான தினேஷ், அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் அப்பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவியை தன்னை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் மாணவியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் நேரிலும் போனிலும் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பெற்றோர் மாணவியை பள்ளியில் இருந்து படிப்பை இடையில் நிறுத்திய போதும், அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு மாணவியிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுப்பதாக பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.

அதன் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷை கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments