அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை - எடப்பாடி பழனிசாமி

0 2952
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை - எடப்பாடி பழனிசாமி

2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கஷ்டப்பட்டு, தற்போது படிப்படியாக மீளும் தமிழக மக்கள் மீது மின்கட்டண உயர்வு என்ற சுமையை அரசு சுமத்தியிருப்பதாகவும், அதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பொள்ளாசி நோக்கி சென்ற அவருக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அ.தி.மு.க.வினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை என்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments