தடுப்புச் சுவரை தாண்டி மன்னர் சார்லசின் காரை நோக்கி ஓடிய நபர் கைது!

0 2750

பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்லும் வழியில் தடுப்புச் சுவரை தாண்டி குதித்து மன்னர் மூன்றாம் சார்லசின் காரை நோக்கி ஓடிய நபர் கைது செய்யப்பட்டார்.

எலிச்பெத் ராணி மறைவுக்கு பிறகு, அரசராக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சார்லஸ் திரும்பினார். சாலையின் இரண்டு பக்கங்களிலும் மன்னரை காண திரளான மக்கள் காத்திருந்தனர்.

அப்போது, திடீரென ஒரு நபர் தடுப்புச் சுவரை தாண்டி குதித்து சாலையில் இறங்கினார். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் உடனடியாக அந்நபரை தரையில் தள்ளி கட்டுப்படுத்தி, கைது செய்தனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments