தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்!

0 3920

மேற்கு வங்கத்தில் தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இ-நக்கெட்ஸ் என்ற மொபைல் கேமிங் செயலியைக் கொண்டு பணமோசடி நடைபெறுவதாக பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள அமீர்கான் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்த படுக்கை அறையில் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பணத்தைக் கைப்பற்றினர்.

பணம் எண்ணும் எந்திரங்களைக் கொண்டு கணக்கிட்டதில் 17 கோடியே 32 லட்சம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது. பலத்த பாதுகாப்புடன் அந்தப் பணம் எடுத்துச் செல்லப்பட்டது.

சீன கட்டுப்பாட்டில் உள்ள செயலி நிறுவனங்களுடன் இவருக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments