சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளிப் பேருந்து

0 5144

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் காயமின்றி உயிர்தப்பினர்.

அரக்கோணத்தில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வீட்டிலிருந்தே அழைத்து வர பேருந்து ஒன்று சென்றது. இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து 5 மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது.

சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே பேருந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு 5  மாணவ மாணவிகளுடன் கீழே இறங்கியதால் காயமின்றி தப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments