இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், புது மாப்பிள்ளை மரணம்.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

0 3990

தூத்துக்குடியில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் புது மாப்பிள்ளை சாலையோரம் சடலமாக கிடந்ததால், இளைஞரின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொட்டல்காடு கிராமத்தைச் சேர்ந்த புதுமாப்பிள்ளையான ஜெகதீஷ், சம்பவத்தன்று தூத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்ததாக கூறப்பட்டது.

அவரது இரு சக்கரவாகனத்திற்கு சேதம் ஏதும் இல்லாததால் ஜெகதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாரளித்த உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments