ஓசியில் பால் பாக்கெட் தர மறுத்த கடை உரிமையாளர் மீது தாக்குதல்.. சிசிடிவிக் காட்சி ஆதாரங்களுடன் போலீசில் புகார்!

0 3341

சென்னை அடுத்த தாம்பரம் அருகே ஓசியில் பால் பாக்கெட் தர மறுத்த கடை உரிமையாளரை இளைஞர்கள் சரமாரியாக தாக்கியது தொடர்பாக சிசிடிவி ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பழைய பெருங்களத்தூரில் பால் கடை நடத்தி வருபவர் ரஜினி. இவரது கடைக்கு வந்த இளைஞர்கள் இருவர், மதுபோதையில் பணம் தராமல் ஓசியில் பால் பாக்கெட் கேட்டு ரகளை செய்த நிலையில், பால் பாக்கெட் தர மறுத்த ரஜினியை சரமாரியாக தாக்கினர்.

புகாரின் பேரில் விசாரித்ததில், தாக்குதல் நடத்தியது பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான புவனேஷ் ,கார்த்திக் என்பதும், புவனேஷ் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 10 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments