குடும்பத்தை பாருங்க.. ஆயுதப்படை காவலர் மனைவியின் கண்ணீர்..!

0 3237

கடன் பிரச்சனைக்கு தற்கொலை தீர்வல்ல என்றும் குடும்பத்தினருக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழ வேண்டும் என்று கோவையில் தற்கொலை செய்து கொண்ட ஆயுத படை காவலரின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கிளப் வளாகத்தில் ரெயின்போ ரோட்டரி கிளப் சார்பில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களுடைய குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சியில் உதவி பெறுவதற்காக கோவையில் தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் காளிமுத்துவின் மனைவி சாலை தில்லை நாயகி மகளுடன் வந்திருந்தார். வெவ்வேறு பகுதியில் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தில் உள்ள நபர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவிற்காக காசோலை வழங்கப்பட்டது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் குடும்பத்தினரை நினைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை வைத்துக்கொண்டு தாம் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பதாகவும் ஆயுத படை காவலரின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments