மணமக்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.. ஒருவர் பலி, 20 பேர் படுகாயம்

0 24943

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திருமணத்திற்காக மணமக்களை அழைத்து சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த  ராமு - உஷாராணிக்கு தண்ணீர் பந்தல் அருகே உள்ள முருகர் கோவிலில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், உறவினர்களுடன் வேனில் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது ஊத்தங்கரை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற டாரஸ் லாரியை வேகமாக முந்தி செல்ல முயன்ற போது, வேன் கட்டுப்பாட்டை இழந்ததில் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில், மணமகளின் உறவினரான சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வேனில் பயணித்த 20 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments