தெலங்கானா அரசு தொடர்ந்து என்னை அவமதிக்கிறது-தமிழிசை குற்றச்சாட்டு

0 2743

தெலங்கானா அரசு தன்னை தொடர்ந்து அவமதித்து வருவதாக அந்த மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், குடியரசு தினத்தன்று தேசியக் கொடியேற்றவும், ஆளுநர் என்ற முறையில் உரை நிகழ்த்தவும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தாம் செல்லும் இடங்களில் அரசு நெறிமுறைகள் (protocol) பின்பற்றப்படுவதில்லை என்று புகார் கூறிய தமிழிசை சவுந்தரராஜன், பெண் ஆளுநர் ஒருவருக்கு எதிராக எப்படி பாகுபாடு காட்டப்பட்டது என்பது குறித்து வரலாற்றில் குறிப்பிட வேண்டும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments