ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் 13 சதவிகிதமாக அதிகரிப்பு

0 2241

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு, 2 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா துவங்கியபோது, அந்நாட்டிடம் இருந்து இந்தியா 2 சதவீத கச்சா எண்ணெய்யை மட்டுமே இறக்குமதி செய்ததாகவும், அது சில மாதங்களிலேயே 13 சதவீதமாக அதிகரித்து விட்டதென்றும் குறிப்பிட்டார்.

சலுகை விலையில் கச்சா எண்ணெய் அளிக்க ரஷ்யா முன்வந்தபோது, அதை வாங்குவதென்று துணிச்சலாக பிரதமர் முடிவெடுத்தது, நாட்டின் இறக்குமதி செலவை குறைக்க உதவியுள்ளது என்றும் நிர்மலா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments