திருட வந்த வீட்டில் ஏதும் கிடைக்காததால் வீட்டிற்கு தீ வைத்து மிளகாய் பொடியை தூவி சென்ற கொள்ளையர்கள்

0 2865

திருட வந்த வீட்டில் விலை உயர்ந்த நகை மற்றும் பணம் கிடைக்காததால், ஆத்திரமடைந்த திருடர்கள் வீட்டுக்கு தீ வைத்து விட்டு, மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் ராம்நகர் 4 ஆம் வீதியில் வசித்து வரும் குழந்தை திரோஸ் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு கிராமத்தில் உள்ள தனது உறவினர் திருமணத்திற்காக சென்றுள்ளார்.

இன்று அதிகாலை அவரது வீட்டிலிருந்து புகை வெளிவந்ததை கண்ட அருகில் வசிப்பவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக தீ அணைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த போது, கொள்ளையர்கள் பீரோவை உடைத்துள்ளதும், அதில் விலையுயர்ந்த பொருட்கள் இல்லாததால் ஆத்திரத்தில் வீட்டுக்கு தீ வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சினிமாவில் வருவது போல் தடயங்கள் ஏதும் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியையும் கொள்ளையர்கள் தூவி சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments