சிரியாவில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி..!

0 2115

சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

ஃபர்டஸ் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஐந்து மாடிக் கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது.

இதில், மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் வரை உயிரிழந்த நிலையில், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments