அதிமுக அலுவலகத்தில் 40 நாட்களுக்கு பிறகு சிபிசிஐடி போலீசார் விசாரணை..!

0 2495
அதிமுக அலுவலகத்தில் 40 நாட்களுக்கு பிறகு சிபிசிஐடி போலீசார் விசாரணை..!

அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த மோதல் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று சுமார் 6 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள்.

ஜுலை மாதம் 11 ஆம் தேதியன்று அதிமுக தலைமையகத்தில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் ஏற்பட்ட வன்முறை மற்றும் சூறையாடல்  தொடர்பாக சுமார் 40 நாட்களுக்கு பிறகு சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கினார்கள்.

2 டிஎஸ்பி.க்கள், 4 ஆய்வாளர்கள் உள்பட மொத்தம் 20 பேர் அதிமுக அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

மோதலின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த போலீசார் அ.தி.மு.க அலுவலக மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அதிமுக எம்.பி. சி வி சண்முகம் உடன் இருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments