அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு

0 2227

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலக மோதல் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூலை 11ம் தேதி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதோடு, ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் புகார் அளித்தார். சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் 20 போலீசாரும், தடயவியல் உதவி இயக்குனர் ஷைபா, சைபர் க்ரைம் பிரிவினரும் அதிமுக அலுவலகத்திற்கு சென்று சிசிடிவி மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments