அமெரிக்காவின் ஆரம்ப பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம்.. 3 மாதத்திற்கு பிறகு உவால்டே நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறப்பு!

0 2631

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஆரம்ப பள்ளியொன்றில், 21 பேர் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, உவால்டே நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.

ராப் ஆரம்பப் பள்ளியில் கடந்த மே மாதம் 24-ந்தேதி நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டது அந்நாட்டையே உலுக்கியது.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலவரையின்றி மூடப்பட்ட நிலையில், 3 மாதத்திற்கு பின் அந்த பள்ளியை தவிர மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டன.

ராப் ஆரம்ப பள்ளி மாணவர்கள், மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல் நாள் ஆர்வமுடன் பள்ளி பேருந்தில் ஏறி மாணவர்கள் பள்ளி சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments