மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் 2 நாள் கூட்டுறவு மாநாடு

0 2486

மத்திய அமைச்சர் அமித் ஷா மாநில கூட்டுறவு அமைச்சர்களுடன் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நாளை தொடங்குகிறது.

இதில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் கூட்டுறவுத் துறையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இத்துறையை மேம்படுத்தவும் ஆலோசனைகள் நடைபெறும்.

தேசிய கூட்டுறவுக் கொள்கையை வகுப்பது, கூட்டுறவுக்கான தகவல் மையம் அமைப்பது, கூட்டுறவுத்துறை தொடர்பான சட்டங்களை விவாதிப்பது உள்ளிட்டவை இந்த மாநாட்டில் நடைபெற உள்ளன.

அமைச்சர்களுடன் தலைமைச் செயலர்கள் கூடுதல் செயலர்கள், கூட்டுறவு பதிவர்கள் என அரசு அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments