சுடிதாரை அணிந்து பெண் போல் வேடமிட்டு நகை, பணம் கொள்ளையடித்த ஆட்டோ ஓட்டுநர் கைது

0 3860
சுடிதாரை அணிந்து பெண் போல் வேடமிட்டு நகை, பணம் கொள்ளையடித்த ஆட்டோ ஓட்டுநர் கைது

மத்திய பிரதேசத்தில் மனைவியின் சுடிதாரை அணிந்து பெண் போல் வேடமிட்டு நகை, பணம் கொள்ளையடித்த ஆட்டோ ஓட்டுநரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 22ஆம் தேதி ஜபல்பூர் மாவட்டத்தில் நள்ளிரவில் முகத்தை மூடிக் கொண்டு சுற்றித் திரிந்த ஒருவர், எதிர்பாராத நேரத்தில் வீடு புகுந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடித்த சென்ற காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகின.

கொள்ளையடித்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக பெண் போல் வேடமிட்டதாக அந்த நபர் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments