தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 4157
தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

நாளை 12 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 5 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

குமரிக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments