மாமனாரை கடுமையாக தாக்கிய பெண் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு.!

0 4058

டெல்லியில் மாமனாரை பெண் போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் தாக்கிய காட்சி வெளியாகியுள்ளது.

டிபன்ஸ் காலனி காவல்நிலைய உதவி ஆய்வாளரான அவருக்கும், மாமனார் குடும்பத்தினருக்கும் இடையே வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாமனார் வீட்டுக்கு சென்று பெண் உதவி ஆய்வாளரும், அவரது தாயாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தாயை மாமனார் கையால் தள்ள முயற்சித்ததை கண்டு ஆத்திரமடைந்த பெண் உதவி ஆய்வாளர் சரமாரியாக தாக்கினார். இதை அங்கிருந்த இன்னொரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்.

இதுதொடர்பான வீடியோ வைரலானதால், பெண் உதவி ஆய்வாளர் மீது வேண்டுமென்றே தாக்கி காயத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments