கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்த பச்சிளம் பெண் குழந்தையின் உடல் மீட்பு.. போலீசார் விசாரணை!

0 4009

தூத்துக்குடியில் கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்த, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்கரைச் சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே கடலில் மிதந்தபடி பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த தென்பாக்கம் போலீசார் மற்றும் மரைன் போலீசார், பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் குழந்தையை கடலில் வீசியது யார், குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்ததால் யாரேனும் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்து குழந்தையை கடலில் வீசி சென்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments