தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

0 4948

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வரும் 7ம் தேதி 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

குமரிக்கடல், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments