பேருந்து நிலையத்தில் 2 வயது பெண் குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்ணை தேடி வரும் போலீசார்..!

0 3301

தருமபுரி பேருந்து நிலையத்தில் 2 வயது பெண் குழந்தையை தனியாக விட்டு சென்ற பெண்ணை சிசிடிவிக் காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிகோட்டையில் இருந்து தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்தில், 2 வயது குழந்தையுடன் முன்பக்கமாக ஏறிய பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த பெண், குழந்தையை பேருந்தில் விட்டு விட்டு பின்பக்கமாக இறங்கி சென்றுவிட்டார்.

இதனையடுத்து, தனியாக இருந்த குழந்தை அழுதுக்கொண்டிருந்ததால் பெற்றோரை தேடிய பயணிகள், நீண்ட நேரமாகியும் யாரும் வராததால் போலீசாருக்கு தகவல் அளித்து காவல் உதவி மையத்தில் குழந்தையை ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments