குடியிருப்பு பகுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

0 2781
குடியிருப்பு பகுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோபால்பேட்டை என்ற பகுதியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வீட்டின் முன் பகுதி வெடித்து சிதறியது.

தகவலறிந்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர், அந்த வீட்டில் படுகாயத்துடன் இருந்த இருவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் சிலிண்டர் அப்படியே இருந்ததால், அதன் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்ற போலீசார், வெடிபொருளால் விபத்து ஏற்பட்டதா என விசாரணை நடத்துகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments