11 நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி ஆழ்கடலில் தத்தளித்த நபர் உயிருடன் மீட்பு..!

0 2389

அட்லாண்டிக் பெருங்கடலில் படகு மூழ்கி 11 நாட்கள் உணவு, தண்ணீர் இன்றி ஆழ்கடலில் தத்தளித்த நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரோட்ரிக்ஸ் (Rodrigues) கடந்த சில தினங்களுக்கு முன்பு மரப்படகு ஒன்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

படகு பயணிக்க தொடங்கிய சிலமணி நேரங்களிலேயே கடல்நீர் புகுந்து மூழ்க தொடங்கியதால், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த ரோட்ரிக், மீன் சேகரித்து வைத்திருப்பதற்காக கொண்டு வந்த பிரீஸர் பாக்ஸில் ஏறி உணவு, தண்ணீர் என எதுவும் இல்லாமல் தனது நேரத்தை கழித்துள்ளார்.

சுரினாம் அருகே கடலில் குளிரூட்டி மிதப்பதை கண்டுபிடித்த மீட்புக் குழுவினர் ரோட்ரிக்கை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments