கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து... பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

0 2749

உத்திரபிரதேச மாநிலம் ரியோதிபூர் பகுதியில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், ஆற்றில் இருந்து மேலும் 5 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை வாரச்சந்தையில் இருந்து திரும்பிய 24 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உள்ளூர் மக்களின் உதவியுடன் 17 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், அன்றைய தினமே ஒரு முதியவர் உட்பட இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், கங்கை ஆற்றில் இருந்து மேலும் 5 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments