முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே நாளை இலங்கைக்கு திரும்புகிறார்..!

0 2893
முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே நாளை இலங்கைக்கு திரும்புகிறார்..!

முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே நாளை சனிக்கிழமை இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக உள்நாட்டில் கடுமையான போராட்டங்களையடுத்து கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற கோத்தபயா, தமது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

மாலத்தீவு வழியாக தாய்லாந்து சென்ற அவர் தற்காலிக விசாவில் தற்போது பாங்காக் நகரில் நட்சத்திர ஓட்டலில் பலத்த பாதுகாப்புடன் தங்கி இருக்கிறார்.

அவர் மீண்டும் நாடு திரும்ப விரும்புவதாக தெரிவித்ததையடுத்து அதிபர் ரணில் விக்ரம்சிங்கே அதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments