அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு

0 3170

அ.தி.மு.க.பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.

ஜூலை-11ந்தேதி நடந்த பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கில், ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலை நீடிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இ.பி.எஸ். தொடர்ந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்றது.

தனி நீதிபதியின் தீர்ப்பில் பல தவறுகள் இருப்பதாகவும், உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் உள்ளதாகவும் இ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தபின் கடந்த 25-ந்தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments