மது அருந்தி விட்டு புல்லட் வாகனத்தை நகர்த்த முடியாமல் தள்ளாடி தவித்த எஸ்.ஐ.. காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விட்ட பஞ்சர் கடை ஊழியர்.!

0 3957

சென்னையில், காலை பணிக்கு வரும்போதே மது போதையில் தள்ளாடியதாகக் கூறப்படும் காவல் உதவி ஆய்வாளரை, பஞ்சர் கடை ஊழியர் ஒருவர் பத்திரமாக காவல் நிலையம் அழைத்து வந்தார்.

காசிமேடு N4 காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ-யாக பணியாற்றுபவர் சற்குணம். 2 நாட்களாக பணிக்கு வராத சற்குணம், காலை 9 மணியளவில் பணிக்கு வரும் வழியில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

போதை தலைக்கேறியதால் புல்லட் வாகனத்தை நகர்த்தக்கூட முடியாமல் தள்ளாடியவரை அருகிலிருந்த பஞ்சர் கடை ஊழியர் பத்திரமாக காவல் நிலையம் அழைத்து வந்துவிட்டார்.

அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments