தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

0 2635

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், காவலர்களுக்கும் கூட பாதுகாப்பு இல்லை என்றும், பெண்கள் நகை அணிந்து தைரியமாக வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 8 வழி சாலை திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்த்த திமுக, தற்போது ஆதரிப்பது வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை பரந்து விரிந்துள்ளதாகவும், கஞ்சா குறித்து விழிப்புணர்வு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் எல் முருகன் வேதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments