ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் பலமணி நேரம் துப்பாக்கிச் சண்டை.. இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

0 2688

ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஜெய்ஷே முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சண்டையின் போது பொதுமக்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments