விநாயகர் சிலைக்கு காவலுக்கு இருந்த நபர் அரிவாளால் வெட்டி கொலை..!

0 3921

செங்கல்பட்டில் விநாயகர் சிலைக்கு காவலுக்கு இருந்த நபரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பாரதபுரத்தில் இருக்கும் விநாயகர்சிலைக்கு இரவு நேர காவலாக ராஜேஷ் கண்ணா, கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கு காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராஜேஷ் கண்ணாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் கண்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments