கள்ளக்குறிச்சி கலவரம்: மேலும் 3 பேரை கைது செய்தது சிறப்பு புலனாய்வு குழு போலீஸ்..!

0 2593

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 3 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. மாணவி இறப்புக்கு நீதி கேட்டு போராட வந்தவர்கள், பள்ளியை சூறையாடி வன்முறை சம்பவத்தை அரங்கேற்றினர்.

சேலம் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த அஜித், ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயமணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் என இதுவரை 366 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments