குதிரை உதைத்ததால் 4 வயது சிறுவன் பலி..!
சென்னை பல்லாவரம் அருகே குதிரை எட்டி உதைத்ததில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
பம்மல் சங்கர் நகர் 30-வது தெருவில் வசித்து வருபவர் டில்லிராஜ். இவர் கால் டாக்சி ஓட்டுநர் இவரது இரண்டாவது மகன் கௌதம் கிருஷ்ணா 4 வயதான சிறுவன் கவுதம் UKG படித்து வந்தான்.
சம்பவத்தன்று மாலையில் கௌதம் கிருஷ்ணா வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மேய்ச்சலில் இருந்த குதிரை ஒன்று கௌதம் கிருஷ்ணாவின் மார்பில் எட்டி உதைத்ததில், சிறுவன் வலியால் அழுது துடிதுடித்து மயங்கி கீழே விழுந்துள்ளான்.
தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்றபோது, சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தகவலின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம் பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments