கொச்சி, கோட்டயம் உள்ளிட்ட இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை.

0 2669

கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் கொச்சி, கோட்டயம் போன்ற நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பல குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இன்றும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோட்டயத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே கேரளாவிலும், கர்நாடகாவிலும் மழைக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments