நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை விரட்டி பிடித்து திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்

0 3911
நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை விரட்டி பிடித்து திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்

பீகாரில் நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞரை அவரது குடும்பத்தினர் விரட்டி பிடித்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

நவாடா மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்த பெற்றோர், வரதட்சணையாக இருசக்கர வாகனத்துடன் 50 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்ய இளைஞர் மறுத்ததால், அவரது பெற்றோர் மணமகள் வீட்டாரிடம் பேசி திருமண தேதியை ஒத்திவைத்து வந்தனர்.

இந்நிலையில், மக்கள் கூடும் சந்தைக்கு வந்த இளைஞரை மணமகள் குடும்பத்தினர் பார்த்து, மடக்கி பிடிக்க முற்பட்டபோது, அவர்களிடம் சிக்காமல் தலைதெறிக்க ஓடியவரை விரட்டி பிடித்து திருமணம் செய்து வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments