சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் மாடதிபதி போக்சோ சட்டத்தில் கைது

0 2593
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் மாடதிபதி போக்சோ சட்டத்தில் கைது

கர்நாடக மாநிலத்தில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் மாடதிபதியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சித்ரதுர்காவில் உள்ள பிரபல முருகமடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார். அந்த மடத்தின் சார்பில் நடத்தப்படும் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளியில் படித்த 2 சிறுமிகள், மடாதிபதியால் 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை அனுபவித்ததாக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு-வை கைது செய்த போலீசார், தங்கும் விடுதியின் வார்டன் உள்பட மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments