பிரதமர் மோடி மனிதநேயமிக்க தலைவராக திகழ்கிறார் - குலாம் நபி ஆசாத்

0 10126
பிரதமர் மோடி மனிதநேயமிக்க தலைவராக திகழ்கிறார் - குலாம் நபி ஆசாத்

பிரதமர் நரேந்திர மோடி மனிதநேயமிக்க தலைவராக திகழ்வதாகவும், ராகுல் காந்தியிடம் அரசியலுக்கான தகுதி இல்லை என்றும் அண்மையில் காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் பேசிய அவர், பிரதமர் மோடியை முரட்டுத்தனமாக மனிதர் என தாம் தவறாக நினைத்துவிட்டதாக கூறினார்.

மேலும், ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்ததாகவும், தன்னை போன்ற மூத்த தலைவர்கள் யார் என்றே தெரியாமல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.

இதனிடையே தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியுடன் தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்றும் அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments