புதுச்சேரியில் 90 முதல் 100 வயதுள்ள முதியவர்களுக்கு ரூ.4 ஆயிரம் உதவித்தொகை - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

0 3023

புதுச்சேரியில் 90 முதல் 100 வயது உள்ள முதியவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், 100 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியிலும் தாய்வழியில் சாதி சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அப்போது தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments