தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று கூறுபவர் அதிமுகவுக்கு எதிராக ஏன் பிரச்னை செய்ய வேண்டும் - இபிஎஸ் கேள்வி.!

0 3431

தனக்கு எந்த பதவியும் வேண்டாம் எனக் கூறும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு எதிராக ஏன் பிரச்சனை செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற முன்னாள் அதிமுக அமைச்சர் என். ஆர். சிவபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பின்பு தான் அது குறித்து கருத்து தெரிவிக்கப்படும் என்றார்.

அ.தி.மு.க வில் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும்  இணைக்க ஓ.பி.எஸ் அழைத்திருப்பது அவரின் நிலைப்பாடு என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களின் நிலைப்பாடு தான் தம்முடைய நிலைப்பாடு என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments