கொளத்தூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் செயின் பறிப்பு - ஒரே கும்பல் கைவரிசை..!

0 2867
கொளத்தூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் செயின் பறிப்பு - ஒரே கும்பல் கைவரிசை..!

சென்னை கொளத்தூரில், ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செம்பியம் குருமூர்த்தி கார்டனில் வீட்டு வேலை செய்துவிட்டு வீட்டிற்கு நடந்துச் சென்ற பெண்ணை கீழே தள்ளிய 2 மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறிக்க முயன்றனர்.

அதேப்போல், காமராஜர் நகரில் அண்ணக்கிளி என்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த நான்கரை சவரன் செயினை பறித்துள்ளனர்.

அந்த பெண் கத்திக் கூச்சலிட்டதும் மக்கள் ஒன்று திரண்டதால் செயினை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

திருவிக நகரிலும் பாரதி என்ற பெண்ணின் கவரிங் செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அடுத்தடுத்து கைவரிசையை காட்டியது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments